04/05/2023

ஊர்த்திருவிழா --------- குறள் வெண்பாக்கள்




நல்லிணக்கச் சான்றாய் நடக்கும் விழாக்களில்
எல்லோரும் சேர்ந்தால் இனிது
(1)

விழாவெனக் கூடி விருந்துண்ணும் போதில்
பலானதைத் தீண்டாமைப் பண்பு
(2)

துள்ளிவரும் காளையின் தோள்களைப் பற்றுகையில்
உள்ளத்தில் வீர உணர்வு
(3)

பறையொலி சப்தம் பலதிசை கேட்க
நிறைவுடன் நிற்கும் நினைவு
(4)

பொங்கல் படையலைப் பார்க்கின்ற போதெல்லாம்
எங்களின் ஊரென்ற இன்பு
(5)

நாட்டார் நகரத்தார் நம்மூர் கிராமத்தார்
வீட்டார் ஒருங்கிணைய வேண்டு
(6)

சொந்தவூர் தேடிவரும் சொந்தங்கள் யாவரையும்
பந்தமென பார்த்தல்தான் பண்பு
(7)

நன்நினைவை எல்லாம் மனதிற்குள் போட்டபடி
நன்றியுடன் போகும் நகர்வு
(8)

இன்பம் தருகின்ற இன்னிசைக் கச்சேரி
நெஞ்சிற்குள் செய்யும் நெகிழ்வு
(9)

வருடம் தவறாமல் வந்திடும் போதில்
அரும்பும் உறவுக்குள் அன்பு
(10)

✍️செ. இராசா

(மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் எடுத்த ஒளிப்படம்)

No comments: