01/04/2023

என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்

  


(விமானப் பயணத்தின் ஊடே தற்சமயம் கொழும்புவில் உள்ளபோது அருமையான மெட்டு ஒன்றிற்கு எழுதிய பாடலே இது)

#பல்லவி
என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்
ஏழைகளின் காவலன் அல்லாஹ்
இம்மையிலே தேர்ந்திட இல்லையென ஈந்திட..
சிந்தையிலே ஏற்றிடும் இரமலான்...

எல்லையின்றி கொடுப்பவன் அல்லாஹ்...
இன்னலின்றி தடுப்பவன் அல்லாஹ்..
உண்மையிலே நின்றிட அண்ணல்வழி சென்றிட
சிந்தையினை மாற்றிடும் இரமலான்...

என்றுமெம்மைக் காப்பவன் அல்லாஹ்.
ஏழைகளின் காவலன் அல்லாஹ்.

#சரணம்
நோன்பு நோற்கும் மாதமே ரமலான்
ஆழ்ந்து நோக்கும் மாதமே ரமலான்
வாழும் காலம் போகுது தானே..
தீரும் முன்னே தெளிந்திடு நீனே...

வேதம் சொன்ன பாதையில் போனால்
யாவும் இங்கே வசப்படு...மே
ஞாலம் மீள காட்டிய வழியில்
நீயும் போக மாறிடும் வாழ்வே..

எண்ணம் போல வாழ்வே... வரம்தானே... 

மனம் மாற வேண்டிடவா..
தந்தால் மட்டும் தானே...
வரும்தானே‌....வளம் கூட வேண்டிடவா..
லாஹி லாஹா இல்லல்லா
நல்வாழ்வைத் தா அல்லாஹ்
லாஹி லாஹா இல்லல்லா
நல்வாழ்வைத் தா அல்லாஹ்

✍️செ. இராசா

No comments: