20/10/2022

தூரம் விட்டு தூரமாய்

 


தூரம் விட்டு தூரமாய்
தொடருகின்ற வேளையில்
உயிரை விட்ட உடலமானேன்...
 
நாளை நாளை என்றுநீ
நாளைத்தள்ளும் வேலையில்
நீரே இல்லா கானலானேன்...
 
செந்தாமரை கண்டாலுன்னை
செந்நீர்மழை கண்ணில்வரும்
 
கம்பன்பொடி கண்டாலுன்னை
காரைக்குடி உன்னைத்தொழும்
 
மெய்யே இதில் பொய்யே இல்லை..
 
பொய்யே எனில் மெய்யே இல்லை..
சரி விடு...சரி விடு....
இதோ இதோ இதோ இனி....
 
✍️செ. இராசா

No comments: