27/10/2022

நேர்மறையாளனும் எதிர்மறையாளனும் சந்தித்தால்...


என்ன உலகமய்யா? என்ன மனிதரய்யா?
ஒன்னும் சரியில்லை ஓய்..
 
என்னே உலகமய்யா!! என்னே மனிதரய்யா!!!
ஒன்னும் குறையில்லை ஓய்...
 
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
என்னய்யா செய்கின்றீர்? எங்கேதான் கற்றீரோ?
என்னைப்போல் யாரய்யா இங்கு?
 
என்னம்மா செய்கின்றீர்!! எங்கேதான் கற்றீரோ?
என்போல் அறிவிலிதான் யார்?!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
நான்யார் தெரியுமா? நானின்றி ஒன்றுமில்லை
நான்தான் அனைத்திலும் வான்
 
நான்யார் எனக்கேட்டால் நானெல்லாம் ஒன்றுமில்லை
வான்கீழ் சிறுதுளி நான்!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
ஒன்றும் பயிலாமல் ஒப்பேத்த எண்ணிடுவோர்
என்ன கிழிப்பாரோ இங்கு?
 
ஒன்றும் பயிலாரும் உச்சத்தைத் தொட்டிடலாம்
என்றும் இறையருளால் இங்கு!
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
 
காசுபணம் உள்ளதெனில் காக்காவும் பேரழகே
காசுதான் எல்லோரின் கண்
 
காண்கின்ற கண்பொறுத்துக் காக்காவும் பேரழகே
காண்பதை நேர்மறையாய்க் காண்
 
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments: