03/10/2022

முறையறிந்து பாராட்டு ---- ஔவைத் திங்கள்- 11



பள்ளிக்குப் போகும்முன் பட்டம் கொடுப்பதுபோல்
அள்ளிக் கொடுத்தால் அழிவு
(1)

அளவுக்கு மீறி அளிக்கும் விருதும்
வளம்குன்ற வைக்கும் மறு
(2)

உன்னைப்போல் இல்லையென ஒத்தூதும் வாழ்த்துகளின்
தன்மையை ஆராய்ந்து தள்ளு
(3)

பொல்லாத் தலைவரைப் பொய்யாய்ப் புகழாமல்
நல்லோரை நன்முறையில் வாழ்த்து
(4)

தரும்போதில் கர்ணன் தராவிட்டால் கஞ்சன்
பெரும்பட்டம் தானா பெரிது?!
(5)

காதலனின் பாராட்டு காதலிக்கு மட்டுமெனில்
ஊதுவதும் ஏனோ உரை?
(6)

முகத்தின்முன் வாழ்த்தி முதுகின்பின் திட்டும்
பகட்டான நட்பைப் பிரி
(7)

பாராட்டும் பண்பறிந்து பாராட்டும் போதில்தான்
பாராட்டால் கிட்டும் பலன்
(8)

பாத்திரம் யாதென்று பார்த்தபின் வாழ்த்தென்றால்
பாத்திறம் என்றாகும் பார்
(9)

முறையறிந்து வாழ்த்தாத மூடர்கள் தப்பால்
குறைகுடங்கள் போடுதுபார் கூத்து
(10)

✍️செ. இராசா


No comments: