07/09/2022

யோசித்துப்பார்...!!!

 


யோசித்துப்பார்...!!!
 
கருவறைத் தொட்டியில்
நீந்திய உன்னை
பெருவெளிப் பள்ளத்தில்
துடிக்கவிட்டது யார்?
 
பரிசுத்த நிர்வாணமாய்த்
திரிந்த உன்மேல்
பாவ ஆடையை
போர்த்தியது யார்?
 
நீண்ட மாரத்தானில்
ஓடிடும் உன்னை
பசிப்பிணி தந்து
வதைப்பது யார்?
 
உறவு மேடையில்
உலவிடும் உன்னை
போலி முகமூடியில்
குத்துவது யார்?
 
நைந்த கூட்டைத்
துறந்திடும் உனக்கு
புதுக்கூடு தந்து
புதைப்பது யார்?
 
சுவடுகள் இன்றிப்
பறந்திடும் உந்தன்
வரவுக் கணக்கை
வைப்பதும் யார்?
 
யோசித்துப்பார்...!!!
 
✍️செ. இராசா

No comments: