26/09/2022

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே

செந்தமிழ் கொஞ்சிடும் கவியே
உன் கோபமும் அற்புத மொழியே
நற்றிணை யாவுன் விழியே
நல்ல நர்த்தனம் ஆடுது தனியே...என் சொந்தமே நீதான்டி

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி

ஆண்:
மேகதூதம் படிக்க
உந்தன் மேனியைத் உற்றுப் பார்த்திடவா..
வெட்டும் மின்னல் ரசிக்க
கொஞ்சம் புன்னகைக் காட்டிடவா..

பெண்:
எம்மலரும் தேனை ருசிக்க
எந்த வண்டுக்கும் சேதிகள் சொல்லிடுமா?
சந்தோச தியானம் நடத்த
இதுதனி மலரல்லவா...

ஆண்:
கற்சிலைக் கவியென மாறி கனவென வந்ததோ முன்னாலே
கண்ணிமை இருப்பது மெய்யா அடிக்கடி பார்க்கிறேன் உன்னாலே..

பெண்:
சொற்பிழை புரிபவன் நீயா? சொற்களின் வித்தகன் நீதானே...
கற்றிட ஆசை எனக்கும் சொல்லிக் கொடுத்திடு என்மானே..

ஆண்:
தந்தானே தகதிமி தானே
தந்தாலே சம்மதந் தானே

பெண்:
பிறந்ததே உனக்கென நானே..  
பிறகென்ன அவசரம் வீணே


✍️செ. இராசா

 

 

கட்டழகே நீதான்டி
கட்டிக்கொள்ள வாரேன்டி
சம்மதத்த சொல்லேன்டி
சகலமென ஆவேன்டி

மோனலிசா சும்மாடி
மோகனமே நீதான்டி
காரிகையே நீவாடி
காத்திருக்கேன் அம்மாடி..

தாரகையே நீதான்டி
தூரிகையே நான்தான்டி
தொட்டெழுத வாரேன்டி
தொட்டிடவா சொல்லேன்டி

தாரகையே நீதான்டி
தாரமென வாயேன்டி
சம்மதத்த தாயேன்டி
சங்கதியச் சொல்லன்டி

No comments: