11/09/2022

மனமே மாற்றியோசி

 

பெயரென்ன? என்று கேட்டார்கள்
வைத்த பெயரா? வாங்கிய பெயரா? என்றேன்...
 
வயதென்ன? என்று கேட்டார்கள்
உடலிற்கா? மனதிற்கா? என்றேன்...
 
படிப்பென்ன? என்று கேட்டார்கள்
வயிற்றுப் படிப்பா? ஆன்மப் படிப்பா? என்றேன்..
 
மதமென்ன? என்று கேட்டார்கள்
மதம்பிடிக்கா மதமென்றேன்
 
சாதியென்ன என்று கேட்டார்கள்
சாதிக்க முனையும் சாதியென்றேன்
 
எந்த ஊர்? என்றார்கள்
யாதும் ஊரென்றேன்...
 
என்னத்..திமிரா? என்றார்கள்
எண்ணத் தெளிவு என்றேன்...
 
கொழுப்பு கூடினா இப்படித்தான் என்றார்கள்
கூடாமல் இருக்கத்தான் நடக்கிறேன் என்றேன்..
 
பெரிய ஆளென்ற நினைப்போ? என்றார்கள்
நான் என்னை மதிக்கிறேன் என்றேன்...
 
என்ன எதிர்பார்க்கிறீர்? என்றார்கள்
எண்ணம்போல் வாழ்வென்றேன்....
 
எந்திரித்து கைகொடுத்தார்கள்
புன்னகையில் பதில் சொன்னேன்!
 

No comments: