02/09/2022

ஓஷோ ரஜனீஷ் அவர்களுக்காக பாடல்

 



மதங்களைக் கடந்த மனிதன் ஐயா - நீர்
மலர்களைப் போன்ற புனிதன் ஐயா
கணம் கணம் வாழ்ந்த கவிஞன் ஐயா- நீர்
கனங்களைச் சுவைத்த ருசிஞன் ஐயா
 
அறமென்ற பேரில் செய்யும்
அக்கிரமம் யாதென்றாய்?
மதமென்ற பேரில் செய்யும்
வக்கிரங்கள் யாதென்றாய்?
அந்த இசம் இந்த இசம்
அனைத்தையும் துவம்சம் செய்தாய்
ஒன்லி இசம் ஹியுமானிசம்
அதன்வசம் வாசம் செய்தாய்
 
மரபென்ற போர்வைக் குள்ளே
மடத்தனம் தீதென்றாய்
அகமுகப் பார்வைக் குள்ளே
அறிந்திடல் தீர்வென்றாய்
காமம் எங்கே? கடவுள் எங்கே?
கருத்தையும் முன்னே வைத்தாய்
சொர்க்கம் எங்கே? நரகம் எங்கே?
...எல்லாமுமே இங்கே என்றாய்...
 
✍️செ. இராசா

No comments: