25/09/2022

மெட்டு: தென்றல் உறங்கிய போதும்

 

(சென்னையில் காவல்துறை நடத்திய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாடகர் திரு. #இன்பக்கலில் Singer Inba Kalil அவர்கள் பழைய பாடல் மெட்டில் பத்து நிமிடங்களில் ஒரு பாடல் வேண்டுமென்று தொடர்பு கொண்டார். இதில் மதுபற்றி வராமல் மற்ற போதை சமாசாரங்கள் வருவதுபோல் பொதுவாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனடியாக சுடச்சுட கத்தாரில் எழுதி சென்னையில் மேடையேறிய பாடலைக் கேட்டது மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது. மிக அழகாகப் பாடிய நண்பருக்கும் இந்த வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் இனிய மனமார்ந்த நன்றி)
 
சொந்தம் உதறிட்டுப் போகும்
பந்தம் உதறிட்டுப் போகும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா?
தம்பி போதை விரும்பணுமா?......(2)
 
கொஞ்சம் கொஞ்சமென்று கொல்லும்
உறவை நாடிக் கெஞ்சும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா?
தம்பி போதை விரும்பணுமா?....(2)
 
வாரக் கடைசியில்
தேடும் இந்தப் போதையே
இந்தப் போதையே 
 
மீண்டும் தேடவே
வேண்டும் என்று சொல்லுமே
என்று சொல்லுமே
 
போதுமென்று எண்ணிடாமல்
மீண்டும் தொடருமே..
ஆசை தீர வேண்டுமென்று
மீண்டும் தொடருமே...‌(2)
 
நெஞ்சம் நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா ?
தம்பி போதை விரும்பணுமா?
 
வாழ்க்கையோடி போன பின்னே
வாழ்வு திரும்புமா?
வாழ்வு திரும்புமா?
 
நாசமாகிப் போன பின்னே
நாளும் திரும்புமா?
நாளும் திரும்புமா?
 
நெஞ்சம் நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
பாதை தவறணுமா?
தம்பி போதை விரும்பணுமா ?
தம்பி போதை விரும்பணுமா?
 
✍️செ. இராசா

No comments: