14/09/2022

குடி குடி அரசைக்காக்கும்

 

ஓடியோடி நாளுமோடி
.....ஓய்ந்திருக்கும் போதிலே
தேடியோடி மாலையோடி
....சேர்வதெங்கே பாரிலே
கூடியாடி மோதிமோதி
....கோப்பைதட்ட வேண்டியே
நாடியோடி யாருமோடி
.....வாங்குமந்தக் குப்பியே...
 
வாரநாளில் மட்டுமென்று
......வாங்கிவந்த ஆர்வமே
நேரகால எல்லையின்றி
......நீளுதிங்கே பாருமே
தூரதூரம் யாருமின்றி
......தொட்டுவந்த பானமே
ஊருகூடி யாருமின்று...
......ஊத்துகின்ற தீர்த்தமே
 
✍️செ. இராசா

No comments: