12/09/2022

எது இனிது? ஔவைத் திங்கள்-008

 


வள்ளுவம் பேசுகின்ற மன்றத்தில் எங்கேனும்
உள்ளமர்ந்து கேட்டால் உவப்பு
(1)
 
நற்றமிழ் கற்றவரின் நன்நட்பு கிட்டுமெனில்
கற்கண்டாய் மாறும் கணம்
(2)
 
எண்ணம்போல் ஓர்பெண்ணை இல்லாளாய் பெற்றுவிட்டால்
வண்ணம்போல் மாறாதா வாழ்வு?!
(3)
 
ஊர்போற்றும் பிள்ளையாய் ஓர்பிள்ளை வந்துவிட்டால்
சேர்ந்திடும் இன்பச் செழிப்பு
(4)
 
இசையிலே ஒன்றி இசைவாகும் போதில்
இசைதரும் இன்பம் இனிது
(5)
 
கவியிலே ஒன்றி கவியாக்கும் போதில்
கவிதரும் இன்பம் களிப்பு
(6)
 
பக்திப் பரவசத்தில் பாடுகின்ற அவ்வேளை
தக்கபடி ஆடினால் சால்பு
(7)
 
காமக் களிப்பில் கலக்கின்ற அவ்வேளை
தாமதம் இன்பத் தவிப்பு
(8)
 
கணம்கணம் ஒன்றி களிப்புடன் செய்தால்
கணங்களில் இல்லை கனம்
(9)
 
அன்புடன் செய்யும் அனைத்துச் செயல்களும்
என்றுமே வாழ்வில் இனிது
(10)
 
✍️செ. இராசா

No comments: