06/07/2021

ஓ....வானமே மனம் மாறாயா

 ஓ....#வானமே_மனம் மாறாயா
மழைநீராய் நீயும் எனைத் தீண்டாயா
பாலை நெஞ்சில் விழ மாட்டாயா?
பொழில்சோலை பூக்கும் வரம் தாராயா...
ஓகோ ஓகோகோ ஓககோ
ஓகோ ஓகோகோ ஓககோ

கண்ணாலே கொய்கிறாயே
கையாலே நெய்கிறாயே
பேசாதே கொல்கிறாயே
வாராயோ அன்பே..

புவித் தீட்டா ஓவியம் நீயே
புதுத் தூரிகை ஆகிட வா
சிலை ஆகாக் காவியம் நீயே
கலைக் கோபுரம் ஆக்கிட வா

✍️செ. இராசா

(புதிய மெட்டுக்கு எழுதிய பாடல் வரிகள்)

No comments: