25/07/2021

அலைகின்ற காற்றை தலையாட்டித் தழுவும் மரங்கள்...

 


அலைகின்ற காற்றை
தலையாட்டித் தழுவும் மரங்கள்...
உப்பு நீருக்குள்
உடையின்றி உலாவும் மீன்கள்..
சுடுகின்ற வெயிலில்
செருப்பின்றி நடக்கும் ஒட்டகங்கள்..
எரிபொருள் ஏற்றாமல்
இயன்றவரை பறக்கும் பறவைகள்..
கணம் கணம் இங்கே
கனமின்றி வாழும் ஜென்கள்..
ஏதோவோர் போதைக்குள்
எப்போதும் மூழ்கும் நாங்கள்..
ஆம்..
இது உல்லாச உலகமே‌.‌...
 
✍️செ. இராசா

No comments: