23/07/2021

கவிதை எழுதும் ஆசை என்னுள்

 


 

கவிதை எழுதும் ஆசை என்னுள்
...கனலாய் எழுகிறதே!
தவிர்க்க முடியா தாகம் வந்துத்
... தவியாய்த் தவிக்கிறதே!
புவியைத் தழுவும் மேகம் போலே
...பொழியத் துடிக்கிறதே!
கவிக்கும் தருணம் காமம் போலே
...களிப்பைக் கொடுக்கிறதே!

✍️செ. இராசா

No comments: