20/07/2021

இன்பக் கவியாகி

இன்பக் கவியாகி
ஒன்றிக் கலந்தாயே உறவே....
உன்னுள் பிழையாக்கி
உண்மைத் திரிபாக்கி
என்னைப் பிரிவாயோ தனியே

கையில் மொபைலாகி
காணும் பொருளாகி
மைய்யம் கொண்டாயே உறவே....
பொய்யைப் பெரிதாக்கி
போரை உருவாக்கி
மெய்யை விடுவாயோ உயிரே

✍️செ. இராசா

No comments: