29/12/2020

வள்ளுவர் திங்கள்_142 கொடை

 


கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

நீ சிந்தும் ஓர் சிறு பருக்கை
ஒரு எறும்புக்கூட்டத்தின் பசி போக்கும்!
நீ செய்யும் ஓர் சிறு தானம்
பல எளியோர் வாழ்வில் ஒளி ஏற்றும்!
கொடு! கொடு!

இங்கே....
இருக்கும்போது கொடுப்பதல்ல கொடை
இல்லாதபோதும் கொடுப்பதே கொடை
இதில் சிறிதென்ன பெரிதென்ன
கொடு! கொடு!

இன்னும்.......
கொடை என்றால் கர்ணனும் பாரியும் தானா?
கொடுப்போர் அனைவரும் கொடையாளியே..
கொடுத்தால் அனைவரும் கொடை ஆழியே....

கொடு! கொடு!
இருப்பதைக் கொடு
இருப்பதில் கொடு

--செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_142
#கொடை

No comments: