21/12/2020

நெத்திலிமீனு கொழம்பு வச்சு

 


நெத்திலிமீனு கொழம்பு வச்சு
நெல்லுச்சோறு வடிச்சு வச்சு
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள
அத்தானுக்கு செஞ்சு தந்தா (2)
 
......... ஐயோ ஐயோ என்ன சொல்ல?!
...........ஆசைக்கொரு வேலி இல்லை
...........அள்ளிக் கொள்ள வந்தேன் புள்ள
...........தள்ளி வையு தட்ட மெல்ல
...........பட்டிக் காட்டு வாசம் புள்ள
...........பக்கா மாசு மீனுக் குள்ள
...........இன்னும் கொஞ்சம் போடு புள்ள
...........திங்கத் திங்கத் திகட்ட வில்லை
 
வையி அடி நீ வையி- நீ
வச்சீனா வச்சிருவேன் கையி
............என்னது?
நான் தட்டச் சொன்னேன்..
............அதானே......?!!
 
நெத்திலிமீனு கொழம்பு வச்சு
நெல்லுச்சோறு வடிச்சு வச்சு
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
அத்தை பெத்த ஒத்தை புள்ள;
......... ஐயோ ஐயோ என்ன சொல்ல?!
இப்ப என்னத்தானே சொன்னீங்க
.........தெரியாதாக்கும்
 
✍️செ. இராசா
(இன்று மனைவியார் வைத்த நெத்திலிமீனால் உருவான பாடல் இது...... நன்றி மனைவியாரே😊😊😊💐💐💐)

No comments: