18/12/2020

 


என் முன்னே நீ வந்தால்
என்ன நான் கேட்டிடுவேன்?!

உன்னையேக் கேட்டிடுவேன்..
உன்னை மட்டும் கேட்டிடுவேன்
எனில்...
நீ வேறு நான் வேறா?!

ஆமாம்...
நீ இல்லா நான் யார்?
நீ உள்ள நான் யார்?!
நீ வந்தால் நான் எங்கே?
நான் போனால் நீ எங்கே?!

அகம் பிரம்மாஸ்மியா?!
அறியேன் நான்

அகம்
நீ
நான்
அறிவேன் நான்
அந்த அறிவே நான்

✍️செ.இராசா

No comments: