27/12/2020

தமிழ்ப்பத்து.............குறள் வெண்பாவில்.......பாரதியாரின் கண்ணன் பாடல் தலைப்பில்

 #தமிழ்ப்பத்து
#குறள்_வெண்பாவில்
#பாரதியாரின்_கண்ணன்_பாடல்_தலைப்பில்

#தமிழென்_தாய்
பாரா திருந்தால் பதராவேன் என்றெண்ணி
நேராமல் செய்தாயே நீ

#தமிழென்_தந்தை
சிந்தைக்குள் வந்தென்னுள் சீராய் அணிசெய்ய
எந்தைபோல் வந்தாயே நீ

#தமிழென்_குரு
இருளை விலக்கும் எரிதீபம் போன்ற
குருவென நின்றாயே நீ

#தமிழென்_தெய்வம்
வேண்டிடும் போதெல்லாம் வேகமாய் வந்திடும்
ஆண்டவன் ஆனாயே நீ

#தமிழென்_தோழன்
துயர்வரும் காலமும் தோழனாய் நிற்கும்
உயர்வுற வானாயே நீ

#தமிழென்_அரசன்
வரியில்லா போதும் வரிதர வேண்டி
அரசன்போல் கேட்பாயே நீ

#தமிழென்_சேவகன்
ஏவிய வேகத்தில் ஈட்டிபோல் பாய்ந்துவரும்
சேவகனாய் மாறாயோ நீ

#தமிழன்_சீடன்
பாடலின் ராகத்தைப் பற்றியதும் பாடுகிற
சீடனாய் வாராயோ நீ

#தமிழென்_குழந்தை
பழகிய ஒன்றையேப் பற்றென பற்றா
மழலையாய்ப் பேசாயோ நீ

#தமிழென்_காதலி
மோதலால் ஊடியே முட்டியே நில்லாமல்
காதலால் கூடாயோ நீ

✍️செ.இராசா

No comments: