26/01/2020

காத்திருத்தல் இன்பம்


தூவிய விதையெல்லாம்
துளிர்த்திடுமா என்ன?!
ஏவிய அம்(ன்)பெல்லாம்
எய்திடுமா என்ன?!

நேசித்த உறவெல்லாம்
நினைந்திடுமா என்ன?!
வாசித்த கவியெல்லாம்
வாழ்ந்திடுமா என்ன?!

விடுத்த வினையெல்லாம்
விட்டிடுமா என்ன?!
கொடுத்த கடனெல்லாம்
கிட்டிடுமா என்ன?!

இருந்தும் காத்திருப்போம்
நம்பிக்கை நாணயமாய்..

✍️செ. இராசா

No comments: