09/01/2020

உன் சுவாசக் காற்றால் என்னை வருடி



உன் சுவாசக் காற்றால்
என்னை வருடி
முத்து இதழ்களால்
முத்திரை பதிப்பாயே...
எங்கு சென்றாய்?

உன் கை விரல்களால்
என்னைத் தீண்டி
மோன நிலையிலே
மோகனம் புரிவாயே....
எங்கு சென்றாய்?

ஒவ்வொரு முறையும்
என்னை இசைத்து
உயிர்க்கும் அதிசயத்தை
உணர வைப்பாயே...
எங்கு சென்றாய்?

என்னவனே....எங்கு சென்றாய்?
உன் கரமேந்தி கவி ஊற்று
என் சிரமாட்டாத் தாலாட்டு
வா...
உன் #புல்லாங்குழல் நான்!

செ. இராசா

No comments: