28/01/2020

எனக்கு நீ அப்படியா?



சிலருக்கு நீ என்றால் ஆகாதாம்!
சிலருக்கு நீ என்றால் பயமாம்!
ஆனால் எனக்கு நீ அப்படியா?!

உன்னில் தொடங்கும்
ஒவ்வோரு முறையும்
என்னையே காண்கிறேன்!

உன்னில் தொடரும்
ஒவ்வோரு முறையும்
என்னையே இழக்கிறேன்!

உன்னோடு இருக்கையில்தான்
என் உருவம் பார்க்கிறேன்!

உன்னோடு கலக்கையில்தான்
என் உயரம் அளக்கிறேன்!

நீ என் முதல்நாளிலும் இருந்தாய்!
நீ என் இறுதிநாளிலும் இருப்பாய்!
பின்னர் ஏன் இடையிடையே மட்டும்
இல்லாமல் போகிறாய்?!

நீ இன்றி நானில்லை....இங்கே
நீ இன்றி யாருமில்லை...

இருந்தும்...
நீ என்றால் ஆகாதாம்!
நீ என்றால் பயமாம்!
ஆனால் எனக்கு நீ அப்படியா?!
சொல்...தனிமையே....
எனக்கு நீ அப்படியா?!

#இனிது_இனிது_ஏகாந்தம்_இனி
து

✍️செ. இராசா

No comments: