24/01/2020

என்திறன் பாடுகின்றாய்..



கைக்கூ எழுதினேன்
கற்பனை இல்லையென்றாய்!

புதுக்கவிதை எழுதினேன்
பொய்யுரை என்றுரைத்தாய்!

பாடல் எழுதினேன்
பாத்திறம் வேண்டுமென்றாய்!

வெண்பா எழுதினேன்
வேண்டாத வேலையென்றாய்!

என்னதான் வேண்டுமென்றேன்?!
என்திறன் பாடுகின்றாய்..

✍️செ. இராசா

No comments: