19/01/2020

வெண்பாவும் பாடலும்.......#பாடல் மெட்டு: எவன்_என்று_நினைத்தாய்.



வெண்பாவும் பாடலும்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

தத்துவ வித்தகனாய் சத்திய புத்திரனாய்
நித்திய சத்குருவாய் நிற்கிற- உத்தமரின்
அத்தனை சொற்களையும் அற்புதப் பொக்கிசமாய்
நித்தமும் பற்றட்டும் நெஞ்சு!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

✍️செ. இராசா

#விஸ்வரூபம்
#எவன்_என்று_நினைத்தாய்
#பாடல்_மெட்டு

அறம் பொருள் அறிவாய்
அதன் படி நடப்பாய்
மனம் வளம் பெறுகையில்
வெளிப்படும் பலரூபம்

உயிர்ப்புடன் இருப்பாய்
உன்னில் உன்னை உணர்வாய்
நேரம் காலம் நேரும்போது
நெறிப்படும் சுயரூபம்

நேர்மையில் நின்றிடுவாய்
நின்று நீ வென்று காட்டிடுவாய்
இல்லறம் துறவறம்
இரண்டிலும் நின்றே
ஊழினை வென்றிடுவாய்..

இன்பங்கள் தவறு இல்லை
சிறு இன்பங்கள் தவறு இல்லை
காமங்கள் தாண்டி கடக்கின்ற பொழுது
கடவுளும் தூரம் இல்லை

அறம் பொருள் அறிவாய்
அதன் படி நடப்பாய்
மனம் வளம் பெறுகையில்
வெளிப்படும் பலரூபம்...(உயிர்ப்புடன்)

✍️செ. இராசா

tagTag PhotopinAdd

No comments: