22/01/2020

நல்லோர் நட்பு


#ஒருவிகற்ப_நேரிசை_வெண்பா

இல்லாரோ உள்ளாரோ
.......என்றெல்லாம் எண்ணாமல்
கல்லாரோ கற்றாரோ
..........காண்கின்ற- எல்லோரில்
நல்லோராய் உள்ளோரை
...........நண்பராய்ப் பெற்றோரே
எல்லாமும் பெற்றவர் இங்கு!...
:
:
................................................
:
#தொடர்ந்து_3_குறள்_வெண்பாக்கள்
#அந்தாதியாக (முடிவில் தொடங்கும்)
:
:
இங்குள்ள நல்லோரை
............இப்போதே காணாமல்
எங்கேநீ காண்பாய் இயம்பு?!....
:
................................................
:
இயம்பிடும் முன்னரே
............இன்முகம் காட்டி
நயமாய்ப் பழகிடும் நட்பு!..........
:
...............................................
:
நட்பியல் கூறிடும்
............நல்லோர் உறவினைப்
பட்டென சீக்கிரம் பற்று!

✍️செ. இராசா

#வள்ளுவர்_திங்கள்_100
#போட்டிக்காக_எழுதாமல்_நிர்வாகியாக_எழுதியது

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

#இரண்டாம்_படைப்பு
********************
ரத்த உறவுகளில்
............இல்லாத ஒன்று
ஒத்த உணர்வாலே
.............உருவாகும் நட்பு!

வர்ணம் பாராத
............அன்பானோர் நட்பு!
கர்ணன் போலான
.............ஆன்றோரின் நட்பு!

ஒன்றும் எதிர்பாரா
..............நல்லோரின் நட்பு
என்றும் இருந்தாலே
............அதுதானே சிறப்பு!

நினைவில் வைத்து
.......கனவில் காண்பதல்ல நட்பு?
மனதில் புதைத்து
......மரணம்வரை தொடர்வதே நட்பு!

உடலோடு உறைகின்ற உயிர்போலே
உணர்வோடு ஒன்றானோர் நட்பாலே
உடமைகள் கைவிட்டுப் போனாலும்
உண்மையில் இழந்ததாய் ஆகாதே!

கோடிகளில் செல்வங்கள் சேர்த்தாலும்
கோட்டையில் கோலாச்சி இருந்தாலும்
நன்நட்பு இல்லாது போனாலோ
தன்னுயிரைக் காப்பாற்ற முடியாதே!!

✍️செ. இராசா

No comments: