25/01/2020

அரூபரூப லிங்கரூப




#அரூபரூப_லிங்கரூப_சோதிரூபன!
சொரூபரூப சித்தரூப மாயரூபனே!
வானரூப மேகரூப மாரிரூபனே!
கானரூப தாளரூப ராகரூபனே!

ஆதிமூலனே சோதிரூபனே
..................ஆவுடை நாயகா!
நீதிதேவனே வேதஞானனே
...................நீருடை மன்னவா!
ஆத்மநாதராய் எம்முள்நிற்கிற
..................அற்புத நாயகா!
ஆற்றலாகியே எம்மையாள்கிற
..................அர்த்தநா ரீசுவரா!
சுத்தபுத்தியை சித்தனாக்கிடும்
..................சூட்சமம் சொல்லவா!
செத்தபுத்தியில் வித்தைகாட்டிடும்
..................சூத்திரம் காட்டவா!

......................(அரூபரூப...)

சங்கநாதமாய் சண்டைமேளமாய்
.................சப்தமாய்ப் பேசவா!
மங்கைநேசமாய் மந்தகாசமாய்
.................மௌனமாய்க் கொஞ்சவா!
அங்குமிங்குமாய் இங்குமங்குமாய்
..................ஆடிடும் ஈஸ்வரா!
அங்கமெங்குமாய் தங்கமின்னலாய்
..................ஆனயென் நாயகா!
சிங்கநெஞ்சமாய் சிந்தைவெள்ளமாய்
..................சீறிடும் என்னவா!
கங்கையுள்ளமாய் அன்பின்வெள்ளமாய்
.................காத்திடு(ம்) மன்னவா!

......................(அரூபரூப...)

சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சம்போ சிவசிவ

ஓம் நமச்சிவாய!

✍️செ. இராசா

தத்தகிட தத்தகிட தத்தகிட தத்தோம்
தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தகடதோம்
தகதகிட தகதகிட தகதகிட தகடதோம்

ஊனுருக உயிருருக
.......உன்நாமம் சொல்வோம்!
உலகவுயிர் அத்தனையும்
........உன்னுருவைக் காண்போம்!
சந்தநடை வந்துவிழ
.........செந்தமிழைப் பயில்வோம்!
சொந்தநடை வந்தவுடன்
.........துள்ளியுனைத் தொழுவோம்!

No comments: