30/10/2019

#கவிதைத்_திருட்டு--வெண்பா



#கவிதைத்_திருட்டு
******************
(கவியரசர் கண்ணதாசரின் மரணத்தின்போது கவிஞர் வாலி அவர்கள் எழுதிய வரிகளை அப்படியே எடுத்து ஒரு கவிஞர் தன் கவியாய் மாற்றி எழுதி நிறைய பாராட்டுக்களை வாங்கினார். நானும் வியந்துதான் போனேன். ஆனால், அதே வரிகளை வேறு இடத்தில் படிக்கும்போது மனம் வலிக்கிறது. அட...வரி பிடித்தால் எழுதிய கவிஞர் பெயரைப்போடுங்கள் ஐயா...அதை விடுத்து இப்படி மற்றோரின் வரிகளை எடுக்காதீர்கள். அது கவிதைத் திருட்டு.

முன்பெல்லாம் கவிதையைத் திருடுவார்கள் இப்போது வரிகளை உருவுகிறார்கள். இப்படி எமக்கு நிறைய அனுபவங்கள் உண்டு உறவுகளே....சரி கடந்துபோவோம்)

வெண்பா
********
அடுத்தோர் வரியை அழகாய் உருகித்
தொடுக்கும் கவிதைத் திருட்டை-விடுத்துப்
படைத்தவன் தந்த படைப்பின் கருவில்
படைப்பினைத் தந்திடப் பார்!

✍️செ. இராசா

No comments: