24/10/2019

#விஸ்வரூபம் காட்டி




 விஸ்வரூபம் காட்டி என்னை
........வியக்கவைத்த மாதவா- யாம்
பஸ்பமாகிப் போகும் முன்னே
........பா-ரதத்தை மாற்றவா!
அற்புதமாய்க் காட்சித் தந்திங்(கு)
.......அசரவைத்தக் கேசவா- யாம்
கற்பனையாய் வாழும் வாழ்வில்
......கவியொளியை ஏற்றவா!

No comments: