14/10/2019

எங்கள் கனவுகள்





(பன்னாட்டுத் தமிழ் மாநாடு-2019ல், வெளியிடப்பட்ட தமிழ்ப்பட்டறை நூலில் இடம்பெற்ற அடியேனின் கவிதை)

உள்ளங்கைகளின்
உட்சூட்டை
எத்தனைநாள் தொட்டிருப்போம்!


உதடுகளின்
உச்சரிப்பை
எத்தனைநாள் கேட்டிருப்போம்!

விரல்களின்
வித்தைகளில்
எத்தனைநாள் வியந்திருப்போம்!

பெருமூச்சின்
சுவாசங்களில்
எத்தனைநாள் நனைந்திருப்போம்!

கடகடக்கும்
ஓசைகளில்
எத்தனைநாள் இணைந்திருப்போம்!

ஆனால்...
ஒரு பெருவெள்ளம்
புரட்டியதில்
எப்படியோ புதையுண்டோமே..!!

ஆம்..

#பகடைகளாய் வாழ்ந்துவிட்டு
படுகையிலே கிடந்தாலும்;
#கீழடியின் காலடியில்
கீழிருந்த காலத்திலும்;
சங்கத்தமிழ் வாழ்வினையே
என்றைக்கும் நினைந்திருந்தோம்!

எங்களின் கனவெல்லாம்
உங்களைக் காண்பதுவே...

ஆமாம்... 
#தமிழர்கள்_எங்கே...?!!

✍️செ. இராசா

மனமார்ந்த நன்றி திரு சேக்கிழார் அப்பாசாமி ஐயா 🙏🙏🙏
மனமார்ந்த நன்றி திருமதி முல்லை நாச்சியார் அக்கா. 🙏🙏🙏

No comments: