02/10/2019

அகர வரிசையில் அறிவுரை வாழ்த்து



அன்பின் உருவாய் அரும்பிய மைந்தனே
அன்பின் குற(ர)ளிது கேள்!

ஆலயம் தாண்டிய ஆன்மீகப் பார்வையில்
ஆழமாய் உள்ளதுதான் அன்பு!

இன்சொல் வழங்கியும் இன்முகம் காட்டியும்
இன்பம் பெறுதல் இனிது!

ஈரடி வைத்தே இயற்றிய நற்குறள்
சீரடி கற்றால் சிறப்பு!

உண்மையில் உண்மையை உண்மையாய்ப் பற்றினால்
உண்மையில் போற்றும் உலகு!

ஊரும் உலகும் உனையேற்றிப் போற்றிட
சீரும் சிறப்பும் சேர்!

எங்கும் எதிலும் இறைவனைக் கண்டிட
எங்கும் பெருகிடும் அன்பு!

ஏற்றிய கல்வியை என்றும் நினைந்திட
ஏட்டிலே மீண்டும் எழுது!

ஐம்புலன் யாவும் அடக்கிடும் ஞானத்தை
ஐங்கரன் பற்றி அறி!

ஒன்றாய்ப் பலவாய் உருவாகி நிற்கிற
ஒன்றினைப் பற்றி ஒளிர்!

ஓதும் மறைகள் உரைக்கிற யாவிலும்
யாதுமாய் நிற்பவன் யார்?!

ஔவியம் இல்லா அறத்தினைக் கற்றிட
ஔவைத் தமிழை அறி!

✍️செ. இராசா

#இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்_செல்லம்
#அன்பு லோகநாதன் அண்ணாவின் மைந்தன்
— with அன்பு லோகநாதன்.

No comments: