12/10/2019

மணலில் கோட்டை கட்டுகின்றார்




மழலைகள் எல்லாம் ஒன்றிணைந்து-இங்கே
மணலில் கோட்டை கட்டுகின்றார்!
கட்டி முடித்த மறுகணமே- அதைக்
காலால் எட்டி உதைக்கின்றார்!

மீண்டும் மீண்டும் கட்டுகின்றார்-அதை
மீண்டும் எட்டி உதைக்கின்றார்!
உதைத்ததை நினைத்தும் வருந்தவில்லை- அது
உடைந்ததே என்று(ம்) கலங்கவில்லை!

இவர்கள் ஆடும் ஆட்டத்திலே
இறைவனின் ஆட்டம் இருக்குதன்றோ?!

No comments: