14/10/2019

இறைவனின் அன்பு இங்கேயே கிட்டும்!



மெல்லிசை பாட்டிற்கு
துள்ளிசை போட்டால்
இன்னிசைக் கச்சேரி
இரைச்சலாய் மாறும்!

நெஞ்சிலே ஈரம்
நில்லாது போனால்
கண்ணிலும் ஈரம்
காணாமல் போகும்!

நெஞ்சத்து நட்பே
நஞ்சினை ஈந்தால்
அகத்தின் அன்பு
அதையும் ஏற்கும்!

உயிர்களின் இடரில்
உருகி நீ நின்றால்
இறைவனின் அன்பு
#இங்கேயே_கிட்டும்!

No comments: