07/10/2019

சொன்னது நீ தானா?



கரையினைத் தழுவும்
.........கடலலை நான்!
கருவிழி கவ்வும்
.......கண்ணிமை நீ!

தூரிகை கொஞ்சும்
.......ஓவியம் நான்!
காரிகை விஞ்சும்
.......காவியம் நீ!

கணினியை இயக்கும்
......மென்பொருள் நான்!
கவியிலே இயங்கும்
.......நன்பொருள் நீ!

உன்னுள் உறைகிற
.....மறைபொருள் நான்!
எங்கும் தெரிகிற
....இறை பொருள் நீ!

இப்படி எல்லாம் சொன்னாயே...!!!
இன்று நீயும்..........!!

#சொன்னது_நீ_தானா?

No comments: