22/10/2019

மனிதனும் தெய்வமாகலாம்



நம்மைப் பெற்ற பெற்றோரையும்;
நாம் பெற்ற பிள்ளைகளையும்;

பற்றிய துணை(வி)யையும்;
பற்றற்ற துறவியையும்;

வறுமையில் இருப்போரையும்;
வறுமையில் இறந்தோரையும்;

தெய்வநிலை ஆத்மாவையும்;
தெய்வப் பரமாத்மாவையும்

விருந்துக்கு வந்தோரையும்;
வருந்துகின்ற சொந்தத்தையும்;

இத்தனை பேர்களையும்;
அத்தோடு தன்னையும்;

அன்போடும் அறத்தோடும்
அனைவரையும் மதிப்போனே
மனித குலம் போற்றுகின்ற
மாணிக்கம் என்றறிவோம்!

#மனிதனும்_தெய்வமாகலாம்
மனிதம் இருந்தால்....!!!

No comments: