13/10/2019

கண்ணனின் தாசன் நீ



கண்ணனின் தாசன் நீ- பலர்
கண்களில் ஈசன் நீ!
கவிஞரில் சிகரம் நீ- பலர்
கவிதைக்கு அகரம் நீ!

நாத்தீகம் அறிந்தோன் நீ- பின்னர்
நாத்-தீய உதைத்தோன் நீ!
ஆத்தீகம் உணர்ந்தோன் நீ- அதில்
ஆத்திரம் தணித்தோன் நீ!

மன்மதக் காதலன் நீ- பின்னர்
மனம்மாறிய கோவலன் நீ!
கவிக்கையில் கம்பன் நீ- அந்தக்
கவி-கையில் மைந்தன் நீ!

உண்மையின் உரைகல் நீ- என்றும்
உன்-மெய்யை உரைத்தோன் நீ!
சந்தத்தில் கவித்தோன் நீ- வரும்
சந்ததிக்கும் கதைத்தோன் நீ!

மதம்பிடித்தத் தத்துவன் நீ- ஆனால்
மதம் பிடிக்கா வித்தகன் நீ!
முரண்பாட்டில் மூத்தவன் நீ- ஆனால்
முரண்படாத நல்லவன் நீ!

#கண்ணதாசன்

No comments: