26/11/2018

எண்ணம் ஆராய்தல்- பாடலாக


*********************************
எண்ணம் கொள்கிற அலைச்சுழலை
நான்காய் வகுத்த அறிவியலை
நன்றாய் நீயும் அறிந்துகொண்டால்
இனிதாய் வாழ்வை செதுக்கிடலாம்!

கோபக் குரோதப் பகையுணர்ச்சி
வேகம் கொள்கிற வெறுப்புணர்ச்சி
மனதில் அழுத்தமாய் உருவானால்
மரணம் உடனே சம்பவிக்கும்!

உணர்ச்சி நிலையாம் பீட்டாவை
உயர்ச்சி நிலையில் வைக்காமல்
அமைதி நிலையாம் ஆல்பாவில்
அமைத்தால் வாழ்வே சிறப்பாகும்!

தியான தவங்கள் செய்துவந்தால்
தீட்டா டெல்டா நிலைசென்றே
உண்மை அறிவுப் புலனாகி
உலகம் நம்மில் வசமாகும்!

எண்ணம் எழுகிற காரணத்தை
ஒன்று ஒன்றாய் ஆராய்ந்தால்
தீய எண்ணத்தை வேரறுத்து
மாய உலகை வென்றிடலாம்!

***************************************
வாழ்க வளமுடன்

No comments: