11/11/2018

பிறந்த நாள் வாழ்த்துகள்- சுரேந்திர குமார்



தமிழ்ச்சோலைத் தாய்மடியில்
தவழுகின்ற தமிழ் மகனே.....

வள்ளுவர் திங்கள் போல
வளருகின்ற இளையவனே...

உயிர்மெய் தமிழ் கொஞ்சும்
உயிர்மை மிகு சகோதரனே...

முகநூலின் முகவரியில்
அகநூலில் நுழைந்தவனே.....

தமையனின் வார்த்தைகளை
இமைபோலக் காப்பவனே...

சுந்தரத் தமிழ் கொஞ்சும்
சுரேந்திரக் குமாரனே.....

நற்றமிழாய் வாழவேண்டி
நானுன்னை வாழ்த்துகின்றேன்...

செந்தமிழாய் சிறக்கவேண்டி
எந்தமிழில் வாழ்த்துகிறேன்...

வாழ்க வளமுடன் தம்பி Surendrakumar

No comments: