07/11/2018

எங்கு சென்றாய்?



எங்கு சென்றாய்?-நீ
எங்கு சென்றாய்?
ஏன் சென்றாய்?-நீ
ஏன் சென்றாய்?

அழைத்த பொழுதெல்லாம்
அடிக்கடி வருவாயே...இன்று
அழுது புலம்புகிறேன்
அலட்சியம் செய்கிறாயே...

என்ன தவறிழைத்தேன்?- சொல்
என்ன தவறிழைத்தேன்?
ஏன் விலகிவிட்டாய்- எனை
ஏன் விலக்கிவிட்டாய்?!

பணியின் சுமையாலே- உனைப்
பார்க்க மறந்துவிட்டேன்- இந்தப்
பாவிப் பிழை பொறுத்து- ஓரு
பார்வை பாராயோ?!

ஐயோ... நீயின்றி- நான்
அனாதை ஆகிவிட்டேன்
சீக்கிரம் வருவாயோ- என்
சிந்தையில் நிறைவாயோ?!!

வாடா என் கவியே- என்
வார்த்தை நீயல்லவா....
வாடா என் தமிழே- உன்
வரவே உயிரல்லவா...

உனக்காய் என்றும் நான்
உயிர்ப்போடு காத்திருப்பேன்...
தமிழின் யாசகன் நான்
தனியாகக் காத்திருப்பேன்...

No comments: