09/11/2018

மூத்தோர் நட்பு (குறளின் குரலாய்)


இருட்டில் உதவிடும் தீப்பந்தம்போல்-தன்
இருப்பில் உதவிடும் பெரியோர்கள்- உடன்
இருப்பது வாழ்வின் சிறப்பன்றோ?!- அது
இறைவன் அருளிய கொடையன்றோ?!

ஒற்றைச் சூரியப் பேரொளிபோல்- தமிழ்
கற்றோர் ஒருவரின் நட்பொளியில்-நமைச்
சுற்றிலும் அறிவொளி பரவுமன்றோ?!-அது
பெற்றோர் உவகையைக் கூட்டுமன்றோ?!

அறிநெறி நூல்கள் சொல்வதுபோல் - நாம்
அறிவுள்ள மூத்தோர் சொல்கேட்டால்- அது
என்றும் நம்மைக் காக்குமன்றோ?!- அது
பண்புள்ள மனிதரின் செயலன்றோ?!

No comments: