12/11/2018

அலட்சியம் செய்யும்




எதையும்அலட்சியம் செய்தால்
அவைகளும் அலட்சியம் செய்யும்
அன்பிலே இணங்கிச் சென்றால்
அவைகளும் வணங்கி நிற்கும்!

விதைப்பது வெறுப்பாய் இருந்தால்
விளைவது காயாய் கசக்கும்!
விதைப்பது விருப்பாய் இருந்தால்
விளைவது கனியாய் இனிக்கும்!

நினைப்பது அழுக்காய் இருந்தால்
நிறையவே குறைகள் தெரியும்!
நினைப்பது அழகாய் இருந்தால்
நிறைவிலே வாழ்க்கை அமையும்!

வாழ்க வளமுடன்!

இனிய காலை வணக்கம்

(புதுசா ஒன்னும் இல்லீங்க.... அதேதான்... இருந்தாலும் அப்பப்ப நாமலும் சொல்லணும்ல....)

No comments: