01/11/2018

#வெட்டப்படும்_ஆடுகள்



உங்களைப்போல்தானே
நாங்களும் கருவுற்றோம்...

உங்களைப்போல்தானே
நாங்களும் பிறப்புற்றோம்....

எங்களைக் கண்டாலே
ஏன் எச்சில் வார்க்கின்றீர்...?!

அங்கங்கள் ஒவ்வொன்றாய்
ஏன் கண்ணில் அளக்கின்றீர்?

பின்னாலே மெல்ல வந்து
ஏன் எம்மைத் தொடுகின்றீர்!

என்ன தவறிழைத்தோம்
ஏன் எம்மைக் கொல்கின்றீர்?

#வெட்டப்படும்_ஆடுகள்

(தகவல்:

கிருபானந்த வாரியாரிடம் சைவம் அசைவம் பற்றி கேட்டதற்கு அவரின் பதில் என்ன தெரியுமா?

ஆட்டைப் பார்க்கும்போது கண்ணில் தண்ணீர் வந்தால் அது சைவம். நாக்கில் தண்ணீர் வந்தால் அது அசைவம்)

No comments: