08/01/2018

தனிமையிலே இனிமை


அன்பின் ஆழத்தைக் கூட்டிடும் தனிமை!
அறிவின் அடர்த்தியைப் பெருக்கிடும் தனிமை!
அலைச்சுழல் வேகத்தைக் குறைத்திடும் தனிமை!
அசந்தால் அடியினில் வீழ்த்திடும் தனிமை!

கருவில் உருவத்தைப் பதித்திடும் தனிமை!
கவிதையின் உருவமாய் மாற்றிடும் தனிமை!
கடவுள் யாரெனச் சொல்லிடும் தனிமை!
கடமை யாதென உணர்த்திடும் தனிமை!

முதுமையின் நிலைமையை அடைந்திடும் பொழுதில்
இளமையின் நினைவினைச் சொல்லிடும் தனிமை!
வெறுமையை நினைவுகள் உணர்த்திடும் பொழுதில்
இறைவனின் நினைவினைத் தோற்றிடும் தனிமை!

தனிமையின் இனிமை தந்திடும் சுகத்தை
தமிழால் சொன்னது ஔவையின் தனிமை!
தவமும் தனிமையும் தந்திடும் வலிமையை
தரணிக்கேச் சொன்னது தமிழனின் பெருமை!

——செ. இராசா——

No comments: