12/01/2018

தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்


“நான் யார்?!”
எனக்குள் ஒரு கேள்வி
எந்நாளும் ஒலித்தது...

அம்மாவிடம் கேட்டேன்
“நீ லூசா...” என்றார்..

அப்பாவிடம் கேட்டேன்
பதிலே இல்லை...

யாரிடம் கேட்டாலும்
அம்மாவின் பதிலே சொன்னார்கள்

கேட்பதை நிறுத்திவிட்டேன்
தேடலை நிறுத்தவில்லை...

எதேச்சையாய் ஒரு புத்தகம் கண்டேன்
என் தேடலின் பதிலை அங்கே கண்டேன்
பதிலைச் சொன்னது “நான் யார்?” புத்தகம்
பதிலைச் சொன்னவர் “சுவாமி விவேகானந்தர்”

குறிப்பு:
********
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று அவரால் ஆத்ம சுத்தம் அடைந்த எத்தனையோ ஆத்மாக்களில் நானும் இருப்பேன் என்று உறுதி கூறிக்கொள்கின்றேன்.

அவர் ஏற்றிய தீபம் என்னுள் எரிந்து, மயிலாப்பூர், மதுரை, கவுகாத்தி மற்றும் கல்கத்தா இராம கிருஷ்ண மிஷன்கள் வரை அழைத்துச்சென்று, எத்தனை மதங்களோ அத்தனை பாதைகள் என்ற சமத்துவ சிந்தனையை என்னுள் விதைத்து, இன்று அது அழகான விருட்சமாக என்னுள் வளர மிகவும் துணை புரிந்த அந்த மகானை மனமார போற்றி வணங்குகின்றேன்.

தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!

—செ. இராசா—

No comments: