18/01/2018

நீரின்றி நிகழாது பிறப்பு


நீரில் தவழ்ந்து
நீரில் இணைந்து
நீரில் உதித்த கருவே!

நீரில் வளர்ந்து
நீரில் மிதந்து
நீர்க்குடம் உடைத்த சிசுவே!

நீரில் குளித்து
நீரைக் குடித்து
நீர்கொண்டு எழுந்த உருவே!

நீருடன் கலந்தோ
நீரெனக் கரைந்தோ
நீராய் மாறிடும் விந்தையே......!

நீரின்றி நிகழாது பிறப்பு!
---செ. இராசா----

No comments: