08/01/2018

76வது கவிச்சரம்---நல்வழிக்கான காரணிகள்

 

தமிழ்த்தாய் வணக்கம்
*********************
தன்னம்பிக்கை தந்துயர்த்தும்
தாய்மொழியாம் தமிழ்மொழியை
தலைகுனிந்து வணங்குகின்றேன்!
தலைநிமிர்ந்து வாழ்த்துகின்றேன்!

கவிச்சரத் தலைமை வணக்கம்
***************************
மலரத்துடிக்கும் மொட்டுக்களை
மலரவைக்கும் கதிரவன்போல்
மலைக்கோட்டை மாநகரில்
மதிப்புயர வீற்றிருக்கும்
மாண்புமிகு சகோதரியாம்
திருமதி. காவிய சேகரனை
மனமாலே மொழியாலே
மகிழ்வுடனே வணங்குகின்றேன்!

தமிழ்ப்பட்டறை அவை வணக்கம்
*******************************
ஆயிரம் குழுமங்கள்
அனுதினம் பூத்தாலும்
அனைவருக்கும் முன்னோடியாய்
ஆதவன்போல் ஒளிர்கின்ற
அவையினை நான் வணங்குகின்றேன்!
அனைவரையும் போற்றுகின்றேன்!

நல்வழிக்கான காரணிகள்
************************
நல்லறத்தை போற்றுகின்ற
நன்மைமிகு மனிதர்களும்
நல்வழியைக் காட்டுகின்ற
நல்லபல நூல்களும்
நாளும் பெருகிடவே
நான் இறையை வேண்டுகின்றேன்!

புத்தகங்கள்
************
பெற்ற அறிவைச் சொல்பவர்கள்
பெற்றோர்கள் என்றறிவோம்!
அறிந்த அறிவைச் சொல்பவர்கள்
ஆசிரியர் என்றறிவோம்!

கற்றதையும் பெற்றதையும்
சொல்லுகின்ற நண்பர்களை
சொத்துக்கள் என்றறிவோம்!
சொந்தங்கள் ஆக்கிடுவோம்!

நல்வழி சொல்லும் நட்பிருந்தால்
நமக்கு ஒரு துணையாகும்!
நல்வழி சொல்லும் நூலிருந்தால்
நமக்கு நூறு நண்பனாகும்!

தரணியிலே தலைநிமிர
தமிழ்நூல்கள் பயின்றிடுவோம்!
தமிழ்மறையாம் திருக்குறளை
தவறாமல் படித்திடுவோம்!

நன்றி நவில்தல்
***************
வாய்ப்பளித்த அனைவரையும்
வாழ்த்தி நானும் விடைபெறுகின்றேன்!
வாழ்க வளமுடன்!

—செ. இராசா—-


https://www.facebook.com/photo.php?fbid=1179148362219632&set=gm.1960711600914413&type=3&theater&ifg=1 

No comments: