31/01/2018

தந்நிலை உணர்த்திய தமிழ்


வலிகளை வரிகளாக்கினேன்
வலி குறைந்தது!

பாசத்தை வரிகளாக்கினேன்
பாசம் கூடியது!

காதலை வரிகளாக்கினேன்
காதல் பெருகியது!

நட்பினை வரிகளாக்கினேன்
நட்பு செழித்தது!

சினத்தை வரிகளாக்கினேன்
சிந்தை விரிந்தது!

பக்தியை வரிகளாக்கினேன்
பக்தி புரிந்தது!

இயற்கையை வரிகளாக்கினேன்
இதயம் குளிர்ந்தது!

தமிழை வரிகளாக்கினேன்
தன்நிலை உணர்த்தியது!

—-செ. இராசா—-

No comments: