20/01/2018

நீ எந்தன் நிலா



நீ வீசும் பேரொளியால்
மண்ணிலவே உன்னழகால்
வெண்ணிலவும் வெட்குதடி!

நீ என்னை நெருங்கிவர
நெஞ்சத்தின் ஆசையெல்லாம்
வளர்பிறையாய் வளருதடி!

நீ என்னை விலகிச்செல்ல
தேகத்தின் சக்தியெல்லாம்
தேய்பிறையாய் தேயுதடி!

நீ இல்லா வாழ்வெனெக்கு
நிலவில்லா அமாவாசையாய்
இருளாகிப் போகுதடி!

நீ இருக்கும் வாழ்வெனக்கு
முழுநிலவு பௌர்ணமியாய்
முழுமைப்பேறு அடையுதடி!

——செ. இராசா——-

No comments: