26/01/2018

அந்நியர் புகல் என்ன நீதி?!----களஞ்சியம் கவிதைப் போட்டி (90)-முதலிடம் பெற்றக்கவிதை



யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதெனக் கூறிய தமிழனே கேளீர்
யாவரும் உறவினர் ஆனதன் பின்னே
யாரை நீரும் அந்நியர் என்றீர்?!

தீதும் நன்றும் பிறர்தர வாரா
யாதும் அறிவோம் அறிவிலி தோழா
சூதும் வாதும் பலபல செய்து
சூழ்ச்சியால் வெல்வோர் அந்நியர் ஆவார்
........................................................
வல்லவர் உலகை ஆளுமை செய்து
வெல்பவர் என்பது உலகியல் அன்றோ?
நல்லவர் கெட்டவர் என்பது எல்லாம்
வல்லவர் நெஞ்சினில் இல்லை அன்றோ?

எதிரிக்கு எதிரியாய் வந்துநீ நின்றால்
எங்களின் வலிமை யாதென அறிவாய்?
நண்பனாய் எம்மிடம் புகலிடம் வந்து
நஞ்சினை அளிப்பது நீதியும் அன்றோ?
........................................................
வந்தாரை எல்லாம் வாழ்ந்திடச் செய்து
வசதியாய் வாய்ப்புகள் வழங்கிய தமிழா
பலரும் உன்னை ஆள்கின்ற பொழுது
புதியவன் நானும் ஆள்வது தவறோ?!

நண்பனின் வாயினில் நஞ்சினை ஊட்டிய
நரிகளின் தந்திரம் இனியும் வேண்டாம் !
பச்சைத் துரோகம் இனியும் செய்தால்
பற்களை உடைத்து கையில் தருவோம்!
........................................................

——செ. இராசா——

 https://www.facebook.com/groups/1535309520121292/permalink/2019020678416838/

No comments: