22/01/2018

காகம் கரையும் சேதி


எங்கேனும் உணவிருந்தால்
எல்லோரும் வந்திடுவோம்!
பார்த்திடும் உணவை எல்லாம்
பகிர்ந்தேதான் உண்டிடுவோம்!


தவறாமல் தினம் தோறும்
தலைமேலே நீர் தெளிப்போம்!
தனிமையிலே துணையோடு
தெரியாமல் இணைந்திடுவோம்!

இருந்தவர் இறப்பாலே
இரங்கலில் கரைந்திடுவோம்!
இறந்தவர் இருப்பாகவும்
இல்லத்தில் கரைந்திடுவோம்!

கருப்பாய் இருந்தாலும்
கருப்பென்று கரையாது
கருப்பே அழகென்று
கவுரமாய் கரைந்திடுவோம்!

———செ. இராசா——

No comments: